சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
338   காஞ்சீபுரம் திருப்புகழ் ( - வாரியார் # 486 )  

கமலரு சோகம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான

கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.
Easy Version:
கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை
கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே களை அற மீது
ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
கன இய வார் ஏந்தின இள நீர் தோய்ந்து எமது உயிர் நீல
அஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும்
அநுபோகம் இனி விட
வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இத(ம்) இய பாத
அம்புயம் அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம் அதுல
அ(ன்)ன நீல அம்பரம் அறியாத அநகர நாள அங்கிதர்
தமை
உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ(ர்) காஞ்சியில்
உறைவோனே
விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய
வெடி படு தேவேந்திர நகர் வாழ் விரி கடல் தீ மூண்டிட
நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை ...
(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில் முதல் கணையாகிய) தாமரை
மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக்
கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள
மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்)
கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே களை அற மீது
ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
... கலகப் போரில் ஈடுபட்டு,
படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம
தாகம் நீங்கும்படி,
கன இய வார் ஏந்தின இள நீர் தோய்ந்து எமது உயிர் நீல
அஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும்
அநுபோகம் இனி விட
... கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர்
போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய
மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண்
மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு,
வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இத(ம்) இய பாத
அம்புயம் அருள்வாயே
... வேத முடிவான, பரம சுகம் தருவதான,
முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத்
தந்து அருளுக.
அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம் அதுல ... அ, ம, கர,
(ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று
அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய்
மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும்,
அ(ன்)ன நீல அம்பரம் அறியாத அநகர நாள அங்கிதர்
தமை
... அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில்
முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும்,
(தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய
சிவபெருமானை,
உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ(ர்) காஞ்சியில்
உறைவோனே
... உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு
அறங்கள் நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே,
விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய ...
பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத்
தழுவுகின்ற கங்கையின் புத்திரனே,
வெடி படு தேவேந்திர நகர் வாழ் விரி கடல் தீ மூண்டிட
நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய
பெருமாளே.
... நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள்
வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள்
வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய
பெருமாளே.

Similar songs:

338 - கமலரு சோகம் (காஞ்சீபுரம்)

தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான

Songs from this thalam காஞ்சீபுரம்

309 - அதி மதம் கக்க

310 - கனக தம்பத்தை

311 - செடியுடம் பத்தி

312 - கன க்ரவுஞ்சத்தில்

313 - தெரியல் அம் செச்சை

314 - புன மடந்தைக்கு

315 - கறை இலங்கும்

316 - செறிதரும் செப்பத்து

317 - அரி அயன் புட்பி

318 - கனி தரும் கொக்கு

319 - தசைதுறுந் தொக்கு

320 - புரைபடுஞ் செற்ற

321 - சலமலம் விட்ட

322 - தலை வலையத்து

323 - இதத்துப் பற்றி

324 - எனக்குச்சற்று

325 - இறைச்சிப் பற்று

326 - கடத்தைப் பற்று

327 - கருப் பற்றிப் பருத்து

328 - கறுக்கப் பற்று

329 - அற்றைக்கு இரைதேடி

330 - முட்டுப் பட்டு

331 - அற்றைக் கற்றை

332 - சுத்தச் சித்த

333 - கொக்குக்கு ஒக்க

334 - தத்தித் தத்தி

335 - பொக்குப்பை

336 - அயில் அப்பு

337 - கச்சு இட்ட அணி

338 - கமலரு சோகம்

339 - கருமமான பிறப்பற

340 - கலகலென

341 - கொத்தார் பற் கால்

342 - கோவைச் சுத்த

343 - சீசி முப்புர

344 - நச்சு அரவம் என்று

345 - படிறொழுக்கமும்

346 - மகுடக் கொப்பாட

347 - மக்கட்குக் கூற

348 - மயல் ஓதும்

349 - முத்து ரத்ந சூத்ர

350 - வம்பறாச்சில

351 - வாய்ந்தப்பிடை

352 - அறிவிலாப் பித்தர்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song